இனப்பிரச்சினைக்குத் தீர்வாகத் தென்னிலங்கை பிரேரிக்கும் திட்டம் குறித்து ஆராய்வதற்காக சர்வகட்சி மாநாடு ஒன்றை இன்று கூட்டுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருக்கின்றார்.
"சர்வதேச தொண்டு நிறுவனங்கள் வன்னிக்குள் சென்று அங்குள்ள மக்களுக்கு உதவி வழங்குவதற்கு உடனடியாக அனுமதி வழங்கப்படவேண்டும். இதனை இலங்கை அரசிடம் இந்தியா அழுத்தமாக்க கூறவேண்டும்.'
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய அரசைக் கண்டித்து நேற்றுச் சென்னையில் மறியல் போராட்டத் தில் ஈடுபட முயன்ற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டார்.
இலங்கை உட்பட 28 உலக நாடுகள் மிக மோசமான நிதி நெருக்கடியை எதிர் கொண்டுள்ளன என்று உலக வங்கி எச்சரித்துள்ளது. உலக வங்கியினதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் கூட்டத்தொடருக்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி நகருக்கு வடக்கே சுமார் 2 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பரந்தன் குமரபுரம் பகுதி மீது நேற்றுக்காலை 6.25 மணியளவில் அரச விமானங்கள் தாக்குதல்களை நடத்தின.
மூத்த அமைச்சர்கள் மற்றும் அச்சுறுத்தல் உள்ள அமைச்சர்கள் ஆகியோரின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ படை உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உட்பட 28 பேரைப் பலிகொண்ட அநுராதபுரம் தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக நேர்மையானதும் பக்கச் சார்பற்றதுமான விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்
இவ்வாறு பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்கள் மீது உண்மையிலேயே கருணாநிதிக்கு அக்கறை இருக்குமானால், அவர்கள் மீது அரக்கத்தனமாக காட்டுமிராண்டித்தனமாக விலங்குகளை விடக் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி வரும் இலங்கை இராணுவத்திற்கு ஆயுதங்கள் வழங்கிப் பயிற்சியளிக்கும் இந்திய அரசுக்கு தி.மு.க. அளித்துவரும் ஆதரவை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்.
பொரலஸ்கமுவவிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த பெண் ஒருவரே அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் வாகனத் தொடரணி மீது தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டார் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அடுத்த ஆண்டு பாதுகாப்புத் துறைக்கு அரசு 17 ஆயிரத்து 706 கோடியே 39 லட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்திருக்கின்றது. இது, இவ்வாண்டுக்குரிய வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சக்கு என ஒதுக்கிய 16 ஆயிரத்து 644 கோடியே 70 லட்சம் ரூபாவையும் விட ஆயிரத்து 62 கோடி ரூபா அதிகமாகும்.
ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு
உந்து சக்தியாக விளங்கிய திலீபன்
உயிர் போக இருந்தும் அடக்குமுறைக்கு பணியாத வீரன்
தியாகி திலீபனின் இருபதாவது ஆண்டு நினைவு தினம் இன்று வந்துள்ள
வேளையில், மாவீரனின் தியாகம் நமக்குச் சொல்லிச் சென்ற, இன்னமும் சொல்லி வருகின்ற செய்தியின் உண்மையை நாம் மீண்டும் ஒருமுறை எம் நெஞ்சங்களில் உள்வாங்கிச் சிந்திப்பது அவசியமானதாகும்..
பயத்தால் நடுங்கும் பிள்ளைகளுக்குத் தாமும் நடுங்கியபடி
ஆறுதல் கூறும் தாய்மார்களை வன்னியில் கண்டேன்
தொண்டு நிறுவன பணியாளர் ஒருவர்
கண்ணீருடன் பி.பி.ஸிக்கு அளித்துள்ள பேட்டி இது
பயத்தினால் நடுங்கியபடியே தாய்மார்கள் தம் குழந்தைகளை ஆறுதற்படுத்திக் கொண்டிருந்தார்கள். இதை என் இருகண்களினாலும் கண்டேன்.
இவ்வாறு மனமுருகி தெரிவித்திருக்கிறார் வன்னியிலிருந்து வெளியேறியுள்ள தொண்டு நிறுவன பணியாளர் ஒருவர். அங்குள்ள நிலைமை குறித்து பி.பி.ஸி. தென் ஆஸியசேவை அவரது பேட்டியை வெளியிட்டுள்ளது..
தமது உறுதிமிக்க போராளிகளை
புலிகள் களத்தில் இறக்கியுள்ளனர்
சண்டேரைம்ஸ் பத்திரிகையில் களநிலை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ்
07.09.2008 அன்று எழுதியுள்ள கட்டுரையின் சில பகுதிகள் இங்கு தரப்படுகின்றன.
கடந்தவாரம் திங்கள்செவ்வாய்க்கிழ மைகளில் தமிழீழ விடுதலைப்புலிகளும் அரச படையினரும் சமீபகாலத்தில் இல்லாத வகையில் கடும் மோதல்களில் ஈடுபட்டி ருந்தனர். 4 ஆவது ஈழப்போரின் மிக முக்கியமான கட்டங்கள் கடந்த வாரம் நிறைவேறியுள்ளன..
முதுகெலும்பு இல்லாத பொலிஸ்துறை
இருந்தென்ன... விட்டென்ன..?
இலங்கையின் பொலிஸ் துறையில் நிலவும் சீர்கெட்ட நிலை நடுநிலையற்ற
தன்மை அரசியல் மயமாகிச் செயற்படும் நிலைப்பாடு என்பவை பற்றியும் மற்றும் அந்த நிலையை மாற்றியமைப்பதற்கான பரிகாரம் குறித்தும் இந்நாட்டின் துறை சேர்ந்த புத்திஜீவிகள் சிலர் வழங்கியுள்ள கருத்துக்களின் தொகுப்பு இங்கு விரிகிறது..